மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
பிக்பாஸ் சீசன் 6 அறிவிப்பு வெளியானதிலிருந்து ஜி.பி.முத்துவின் மேல் தான் பலரும் அதிக எதிர்பார்ப்பு வைத்திருந்தனர். அதற்கேற்றார்போல் முதல் வாரம் முழுவதுமே பிக்பாஸ் வீடு வேற லெவலில் கலகலப்பாக இருந்தது. அதற்கான மொத்த காரணமும் ஜி.பி. முத்து என்றே சொல்லலாம். பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருக்கிற தகுதி அவர் ஒருவருக்கே என்று மக்களே அவருக்கு டைட்டில் பட்டம் சூட்டிவிட்டனர்.
இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜி.பி.முத்து தன் மகனுக்காக பிக்பாஸ் வீட்டை விட்டு அடம்பிடித்து வெளியேறினார். இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் வருத்தமடைந்தாலும், ஜி.பி.முத்துவை பாரட்டியும் வருகின்றனர். அதிலும் சில பிரபலங்கள் ஜி.பி. முத்துவின் துணிச்சலான செயலை பாராட்டி சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான சீனுராமாசாமியும் ஜி.பி. முத்துவை புகழ்ந்து பாராட்டியுள்ளார். அதில், 'வெற்றி பெற தகுதியான ஒரு போட்டியாளன், அதன் வருமானம் வெகுமானம் யாவற்றையும் பணிவோடு வேண்டாமென துறந்து விட்டு தன் மகனுக்காக புகழ் வாய்ந்த சபையில் உலகறிந்த நடிகர் கேட்டும் கேளாமல் பிக்பாஸ் 6-லிருந்து விடைபெற்ற தமிழ்மகன் ஜி.பி.முத்து தான் தீபாவளியின் வெற்றி நாயகன்' என்று கூறியுள்ளார்.