நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் படம் மாமன்னன். இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க வில்லனாக பஹத் பாசில் நடித்துள்ளார். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு நடிகர் வடிவேலு முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்ல ஹைலைட்டான அம்சமாக இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். உதயநிதியின் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பது இதுவே முதல் முறை.
இந்த நிலையில் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது இந்த படத்திற்கான பின்னணி இசை பணிகளை துவங்கியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். அவரது ஸ்டுடியோவில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள மாரி செல்வராஜ், “என்னுடைய நீண்ட நாட்கள் காத்திருப்பு கிட்டதட்ட தற்போது வெளிச்சத்திற்கு வருகிறது. மாமன்னன் மூலமாகத்தான் இது நிகழ்ந்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இந்த கூட்டணி சாத்தியமானதற்கு உதயநிதி மற்றும் ரெட் ஜெயிண்ட் மூவிஸுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.