விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு | நயன்தாரா, கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு | திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் |
நடிகர் ஜெயம் ரவி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உரிய மருத்துவ சிகிச்சை மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றுவதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் கதையின் நாயகனான பொன்னியின் செல்வனாக அருள்மொழி வர்மன் வேடத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார். இந்த பட வெளியீட்டிற்கு முன்பு பல ஊர்களுக்கு சுற்றி புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வந்தார். படம் வெளியாகி மூன்று வாரங்களை கடந்து பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை கொட்டியது.
இந்நிலையில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவு : ‛‛எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. உடனடியாக என்னை தனிமைப்படுத்தி அனைத்து கொரோனா விதிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தேவைப்பட்டால் தங்களை பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள்'' என்றார்.