கதைகளை புனைவதால் வருத்தம்: பாடகி சைந்தவி | மீண்டும் அயோத்தி மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்! | 4 மொழிகளில் திரைக்கு வரும் அமலாபாலின் ‛லெவல் கிராஸ்' | இந்தியன்-2 படத்தோடு வெளியாகும் இந்தியன்- 3 படத்தின் டிரைலர்! | சர்ச்சையாக பேசிய திமுக பேச்சாளர்: நடிகை ராதிகா புகார் | மோசடி வழக்கில் நயன்தாரா பட இயக்குனர் கைது | வித்தியாசமான ஹேர்ஸ்டைலுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ் | ரிலீஸ் செய்ய மறுத்த ஆத்திரத்தில் பேஸ்புக்கில் படத்தை வெளியிட்ட டொவினோ தாமஸ் பட இயக்குனர் | கார் விபத்தில் சிக்கிய லியோ நடிகரின் குடும்பம் ; உறவினர் ஒருவர் பலி | இயக்குனரின் கணவர் பேட்டியால் சிக்கலில் மம்முட்டி |
பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு நடித்துள்ள மாமன்னன் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதையடுத்து துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். கர்ணன் படத்துக்குப்பிறகு துருவ் விக்ரம் நடிப்பில் கபடி விளையாட்டை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்குவதற்கு தயாரானார் மாரி செல்வராஜ். அப்போது திடீரென்று உதயநிதி நடிக்கும் மாமன்னன் படத்தை இயக்க திட்டமிடப்பட்டதால் துருவ் படம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மாமன்னன் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதால் அடுத்தப்படியாக துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை மாரி செல்வராஜ் இயக்க தயாராகி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்குகிறது.