காதலாகி, கசிந்துருகி… பிரிவாகி… - தமிழ் சினிமா பிரபலங்களின் பிரிவுகள் | யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரியோ ராஜ்? | ஜூன் 1ல் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா | மே. 24ல் வெளியாகும் பி.டி. சார் | 'கில்லி' - 25 நாளில் இத்தனை கோடி வசூலா ? | இரண்டே நாளில் அஜித்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? | கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குகிறேனா? - நடிகர் பாலா அதிரடி பதில் | சூர்யா படத்தில் ஹாலிவுட் பைட் மாஸ்டர் | தெலங்கானாவில் 10 நாட்களுக்கு தியேட்டர்களை மூட முடிவு | சைந்தவி உடனான பிரிவை வைத்து விவாதம் : தமிழர் மாண்பு குறைந்து விட்டதா என ஜிவி பிரகாஷ் ஆதங்கம் |
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக தீபாவளி பண்டிகை முன்னிட்டு சேலை, வேட்டி மற்றும் இனிப்புகள் அடங்கிய துணிப்பை வழங்கப்பட்டது. இதற்காக நடிகர் சூர்யா 10 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளார். அதோடு நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் பூச்சி முருகன், கோவை சரளா, ஸ்ரீமன், நாசர், லதா, விமல், கருணாஸ், மனோபாலா, தளபதி தினேஷ், விக்னேஷ், வாசு தேவன் ஆகியோர் இணைந்து 2 லட்சம் ரூபாய் வழங்கினர். இந்த தொகையை கொண்டு நலிந்த கலைஞர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது. சங்கத்தில் நடந்த விழாவில் கார்த்தி இந்த பரிசுகளை வழங்கினார். இதில் பூச்சி முருகன், மனோபாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வெளியூரில் இருக்கும் கலைஞர்களுக்கு பரிசு பொருட்கள் அவர்களது வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.