விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு | நயன்தாரா, கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு | திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் |
கடந்த 2016ல் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான புலிமுருகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று மலையாள சினிமாவில் 100 கோடி வசூல் இலக்கை எட்டிய முதல் படம் என்கிற பெருமையையும் பெற்றது. இந்த படத்தை இயக்குனர் வைசாக் இயக்கியிருந்தார். இதைத்தொடர்ந்து அவர் மம்முட்டியை வைத்து அவர் இயக்கிய மதுர ராஜா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. தற்போது மோகன்லாலை வைத்து வைசாக் இயக்கியுள்ள மான்ஸ்டர் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வரும் அக்டோபர் 21ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் அடுத்ததாக பிரித்விராஜை வைத்து படம் இயக்குகிறார் வைசாக். இந்த படத்திற்கு கலிபா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பிரித்விராஜின் பிறந்தநாளான நேற்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2010ல் மம்முட்டி, பிரித்விராஜ் இருவரும் இணைந்து நடித்த போக்கிரி ராஜா என்கிற படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார் வைசாக். அந்த வகையில் 12 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.