நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமாவில் ஒருசில குறும்படங்களை இயக்கி, பின்னர் இயக்குனர் சுசி கணேசனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சமயத்தில், அவரிடம் இருந்து பாலியல் தொந்தரவுகளை சந்தித்ததாக புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் லீனா மணிமேகலை. அதைத் தொடர்ந்து தற்போது தான் இயக்கி வரும் காளி என்கிற ஆவணப்படத்தின் போஸ்டரில் காளி தெய்வம் புகைப்பிடிப்பது போன்றும் ஓரினச்சேர்க்கையாளர்களின் கொடியை கையில் பிடித்திருப்பது போன்றும் சித்தரித்து கடுமையான சர்ச்சையில் சிக்கினார். இதுகுறித்து நாட்டின் பல இடங்களில் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் அவருக்கு சம்மனும் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் அவர் அடுத்ததாக இயக்கும் திரைப்படத்தில் நடிகை பார்வதி கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு தன்யா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கிராமி விருது வென்ற தயாரிப்பாளர் அபூர்வா பக்சி இந்த படத்தை தயாரிக்கிறார். இதுகுறித்த தகவலை தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார் மணிமேகலை. இந்தப்படம் சகோதரிகளின் பாசத்தை வலியுறுத்தும் விதமாக அதேசமயம் திரில்லராக உருவாக இருக்கிறதாம்.