ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்கள் வெளியான பின்பு கதை உருவாக்கம் மற்றும் வியாபார ரீதியில் முன்னணி வரிசைக்கு நகர்ந்துள்ளது கன்னட சினிமா. இந்தநிலையில் தற்போது சமீபத்தில் வெளியான காந்தாரா என்கிற திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக தென்னிந்திய சினிமாவின் பிரபல நட்சத்திரங்கள் பலரும் இந்த படத்தை வியந்து பாராட்டி வருகின்றனர்.
கன்னட சினிமாவின் நடிகரும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டி இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் உள்ளார். இந்த நிலையில் இந்த படத்தை இரண்டு முறை பார்த்து ரசித்துள்ளார் நடிகர் பிரபாஸ். இதுபற்றி பிரபாஸ் கூறும்போது, “காந்தாரா படத்தை இரண்டாவது முறையாக பார்த்தேன்.. என்ன ஒரு அற்புதமான அனுபவமாக அது இருந்தது.. அருமையான கான்செப்ட் மற்றும் த்ரில்லிங் க்ளைமாக்ஸ்.. கட்டாயம் தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டிய ஒரு படம் இது” என்று பாராட்டியுள்ளார்..