'தி கோட்' - போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஆரம்பம் | கமெண்ட் ஆப் செய்து பதிவிட்ட ஜிவி பிரகாஷ் | மூன்றாவது முறையாக டிராப் ஆன 'குற்றப்பரம்பரை' | 'விஜய்' வரிசையில் அடுத்த நாயகன் விஜய் கனிஷ்கா | நாங்கள் பிரிகிறோம் : ஜிவி பிரகாஷ் - சைந்தவி அறிவிப்பு | ஸ்டார் படத்தின் முதல்வார வசூல் நிலவரம் இதோ | பத்து நாளில் 55 கோடி வசூலித்த அரண்மனை 4 | திரிஷாவின் ஐடென்டிட்டி படப்பிடிப்பு நிறைவு | நடிகர் சங்கத்திற்கு தனுஷ் ரூ.1 கோடி நிதி | மே 17 ரிலீஸ் : இந்த வாரமும் மக்கள் தியேட்டர்களுக்கு வருவார்களா? |
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் ரஜினி நடித்து வரும் சில காட்சிகளின் புகைப்படங்கள் அவ்வப்போது சோசியல் மீடியாவில் கசிந்து வருவதை அடுத்து பலத்த செக்யூரிட்டி போட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.
இப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகி பாபு, தமன்னா உள்பட பல நடித்து வரும் நிலையில் தற்போது மிர்னா மேனன் என்ற மலையாள நடிகையும் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மலையாளத்தில் பிக் பிரதர் என்ற படத்தில் நடித்துள்ள இவர், தமிழில் அதிதி மேனன் என்ற பெயரில் பட்டதாரி போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது மிர்னா என்ற பெயரில் தமிழில் புர்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது ஜெயிலர் படத்தில் பிரியங்கா மோகன் நடிக்க இருந்த வேடத்தில் மிர்னா மேனன் நடிப்பதாக கூறப்படுகிறது.