நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த கார்த்தி உள்ளிட்ட பலருக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டிருந்தார் ரஜினிகாந்த். இந்த நிலையில் அப்படத்தில் பெரிய பளுவேட்டரையர் வேடத்தில் நடித்த சரத்குமார், ரஜினியை நேரில் சந்தித்துள்ளார். அது குறித்த வீடியோவை தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார். மேலும், ரஜினியை சந்தித்த இன்றைய நாள் மிக சிறப்பாக தொடங்கியது. அவரிடத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பெரிய பளு வேட்டரையர் வேடம் குறித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அதன்பிறகு காபி அருந்திக்கொண்டு எங்களது தொழில் பற்றி நட்பு ரீதியாக பேசிக் கொண்டோம். அப்போது எங்களுடன் எனது மகள் வரலட்சுமியும் உடன் இருந்தார். அவர் நடித்து வரும் படங்கள் குறித்தும் ரஜினிகாந்த் ஆர்வத்துடன் கேட்டறிந்தார். இப்படி எங்களுக்காக சில மணி நேரங்களை ஒதுக்கிய ரஜினிக்கு என்னுடைய நன்றி என்று தெரிவித்திருக்கிறார் சரத்குமார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.