ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பரத், வாணி போஜன் இணைந்து நடித்துள்ள படம் மிரள். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், மீரா கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.டில்லி பாபு படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி பேனரில் தயாரித்துள்ளார், சக்தி பிலிம் பேக்டரி இந்த படத்தை வெளியிடுகிறது. எம்.சக்திவேல் இந்த படத்தை இயக்கியுள்ளார். பிரசாத், இசையமைத்துள்ளார். சுரேஷ்பாலா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் எம்.சக்திவேல் கூறியதாவது: பரத்தும், வாணி போஜனும் கணவன், மனைவி, அவர்களுக்கு 8 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. சென்னையில் வாழும் அவர்களுக்கு பல்வேறு நெருக்கடிகள் இருக்கிறது. இதனால் குல தெய்வ கோவிலில் பூஜை செய்து வழிபடுவதற்காக தென்காசிக்கு வருகிறர்கள். பூஜை முடிந்து அந்த பகுதியில் கள்ள காற்றாலை வழியாக இரவு நேரத்தில் திரும்புகிறார்கள்-. அப்போது அவர்களுக்கு ஏற்படும் திரிலான அனுபவங்கள், அதிலிருந்து அவர்கள் எப்படி வெளியே வருகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
இதுவரை காற்றாலை பின்னணியில் எந்த படமும் வந்தில்லை. 24 நாள் வரை காற்றாலை பகுதியிலேயே படப்பிடிப்பு நடந்தது. 150 அடி உயரத்தில் காற்றாலை செட் போட்டு படமாக்கினோம். வித்தியாசமான த்ரிலர்லர் அனுபவமாக படம் இருக்கும். என்றார்.