ஜுன் 20ல் மும்முனைப் போட்டி | அதிக நேரம் ஓடும் படங்களில் 5வது இடம் பிடித்த 'குபேரா' | விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை |
கடந்த 20 வருடங்களாக ரசிகர்களின் மனதில் கனவு படமாகவே தங்கியிருந்த பொன்னியின் செல்வன் நாவலுக்கு தற்போது திரை வடிவில் உயிர் கொடுத்துள்ளார் இயக்குனர் மணிரத்னம். கடந்தவாரம் வெளியான இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த நாவலின் தீவிர வாசகர்கள் என்பதால் அவர்களும் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்துவிட்டு தங்களது வியப்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இசைஞானி இளையராஜா தற்போது பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து ரசித்துள்ளார். இதற்கான சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்த சுகாசினி மணிரத்னம் இந்த தகவலை வெளியிட்டுள்ளதுடன், “மேஸ்ட்ரோ இளையராஜா எங்களது படத்தை பார்த்தது மிகப்பெரிய கவுரவம்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மணிரத்னம் இயக்குனராக அறிமுகமானதிலிருந்து 1993-ல் வெளியான தளபதி படம் வரை தொடர்ந்து இளையராஜாவுடன் மட்டுமே இணைந்து பணியாற்றி வந்தார். இவர்கள் கூட்டணியில் வெளியான படங்கள் காலத்தால் மறக்க முடியாத மிகச்சிறந்த பாடல்களை கொடுத்துள்ளன.
தளபதி படத்திற்குப்பின் இளையராஜாவிடம் இருந்து பிரிந்த மணிரத்னம் இப்போதுவரை ஏ.ஆர்.ரகுமானுடன் மட்டுமே பயணித்து வருகிறார். பொன்னியின் செல்வன் படம் உருவாக ஆரம்பித்த சமயத்தில் கூட இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.