Advertisement

சிறப்புச்செய்திகள்

உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து உருவாகி உள்ள ‛எலக்சன்' | நடிகை நவ்யா நாயரின் சென்னை நினைவுகள் | அஜித்திற்கு இப்படி ஒரு வினோத பிரச்சனை இருந்ததா ? சுந்தர்.சி கூறிய ஆச்சர்ய தகவல் | அல்லு அர்ஜுன் மீது ஆந்திர போலீசார் வழக்கு | 'சர்பரோஸ்' 25ம் வருடத்தில் 2ம் பாகத்தை அறிவித்த அமீர்கான் | படத்தை ரிலீஸ் பண்ண விடாமல் டொவினோ தாமஸ் தடுக்கிறார் ; இயக்குனர் விரக்தி | குகைக்குள் விழுந்தவருக்கு பிஸ்கட்டால் மேக்கப் ; மஞ்சும்மேல் பாய்ஸ் இயக்குனர் புது தகவல் | ஜிவி பிரகாஷ் - சைந்தவி பிரிவு: குடும்ப பிரச்னை காரணமா? | கெட்ட வார்த்தையுடன் சந்தானம் பட புரோமோ வீடியோ | 2026 தேர்தல் - விஜய், விஷாலைத் தொடர்ந்து சூர்யா ? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆயிரத்தில் ஒருவன் கடனை அடைக்க எட்டு வருடம் ஆனது; செல்வராகவன்

09 அக், 2022 - 11:43 IST
எழுத்தின் அளவு:
It-took-eight-years-to-pay-off-the-debt-of-Aayirathil-Oruvan-says-Selvaraghavan

மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சோழர்கள் சாம்ராஜ்யத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த படம் ரிலீசாவதற்கு முன்பாகவே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சோழர்கள் வரலாறு பற்றி சோசியல் மீடியாவில் மிகப்பெரிய விவாதங்களையும் தேடல்களையும் ரசிகர்களிடம் ஏற்படுத்தியது.

இந்த சமயத்தில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படமும் இப்போது ரசிகர்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளது. காரணம் பேன்டஸி கலந்த பிக்சன் படமாக உருவாகி இருந்த அந்த படத்தில் சோழர்கள் வரலாறு பற்றியும் ஒரு பகுதியாக சொல்லியிருந்தார் செல்வராகவன். அதுமட்டுமல்ல அந்த படத்தில் இணைந்து நடித்த கார்த்தி, பார்த்திபன் இருவருமே இப்போது பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்துள்ளதால் அதுகுறித்த பேச்சுக்களும் செல்வராகவனுக்கான பாராட்டுக்களும் சோசியல் மீடியாவில் ஒரு பக்கம் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் இதுகுறித்து ஒரு பேட்டியில் செல்வராகவன் கூறும்போது, ஆயிரத்தில் ஒருவன் படத்தை எடுத்த சமயத்தில் படத்தின் பட்ஜெட்டை விட 12 கோடி ரூபாய் அதிகமானதாகவும் படத்தின் தயாரிப்பாளர் சிரமப்படக்கூடாது என்பதற்காக வங்கி மற்றும் பைனான்ஸ் மூலமாக 12 கோடி ரூபாய் கடன் வாங்கி அந்த படத்தை முடிந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் அந்த படத்திற்காக தான் செலவிட்ட பணத்திற்கு தயாரிப்பாளரிடம் இருந்து எந்தவிதமான பங்கையும் கேட்கவில்லை என்றும் அப்படி கடன் வாங்கிய பணத்தை செட்டில் செய்வதற்கு தனக்கு எட்டு வருடங்கள் ஆனது என்றும் ஒரு புதிய தகவலை கூறியுள்ளார் செல்வராகவன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பொன்னியின் செல்வன் பார்த்த இளையராஜாபொன்னியின் செல்வன் பார்த்த இளையராஜா மாடல் அழகியுடன் டேட்டிங்; காதலை உறுதிப்படுத்திய காளிதாஸ் மாடல் அழகியுடன் டேட்டிங்; காதலை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)