ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

மலையாளத்தில் மோகன்லால் நடித்து சூப்பர் ஹிட்டான 'லூசிபர்' படத்தைத் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க 'காட்பாதர்' என்ற பெயரில் ரீமேக் செய்து நேற்று வெளியிட்டார்கள். படத்திற்கு நேற்றே நல்ல விமர்சனங்கள் வர ஆரம்பித்தது. ஆனால், முதல் நாள் வசூல் எதிர்பார்த்த அளவு இல்லை என தெலுங்கு பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலக அளவில் 38 கோடியும், தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானாவில் 20 கோடியும் மட்டுமே இந்தப் படம் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கான உலக அளவிலான தியேட்டர் வியாபாரம் சுமார் 90 கோடி வரை நடந்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். சுமார் 120 கோடி வரை வசூலித்தால் மட்டுமே இந்தப் படம் வெற்றிப் படமாக அமையுமாம்.
அரசியலில் ஈடுபட்டதால் சில வருடங்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தார் சிரஞ்சீவி. அதற்குப் பிறகு அவர் விஜய் நடித்து தமிழில் வெளிவந்த 'கத்தி' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'கைதி நம்பர் 1' மூலம் மீண்டும் வெற்றிகரமாக ரீ என்ட்ரி ஆனார். ஆனாலும், அதற்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த படங்கள் பிரம்மாண்டமாகத் தயாரானாலும் வெற்றிப் படங்களாக அமையவில்லை. 'சைரா நரசிம்ம ரெட்டி, ஆச்சார்யா' ஆகிய இரண்டு படங்களும் தோல்வியைத் தான் தழுவியது.
'காட் பாதர்' படத்திற்கு பாசிட்டிவ்வாக விமர்சனங்கள் வந்ததால் வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், முதல் நாள் வசூல் குறைவாக இருப்பது கவலையை அளித்துள்ளதாம். ரீ என்ட்ரிக்குப் பிறகு வெளிவந்த சிரஞ்சீவி படங்களில் இந்தப் படம்தான் தெலுங்கு மாநிலங்களில் குறைவான வசூலைக் கொடுத்துள்ளதாம்.