அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
இயக்குனர் ஆர். கே .செல்வமணி, நடிகை ரோஜா தம்பதியின் மகள் அன்ஷு மாலிகா. இவர் ஆதித்ய வர்மா, மகான் படங்களில் நடித்த விக்ரமின் மகன் துருவ், தெலுங்கில் நடிக்க இருக்கும் ஒரு படத்தில் ஹீரோயினாக அறிமுகமாக இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் அது குறித்து இயக்குனர் ஆர் .கே .செல்வமணி ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், என்னுடைய மகள் அன்ஷு மாலிகா மேற்படிப்பிற்காக தற்போது அமெரிக்கா சென்று இருக்கிறார். இன்னும் நான்கு ஆண்டுகள் அவர் அங்கு தான் இருப்பார். அதனால் அவர் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக தெலுங்கு படத்தில் நடிப்பதாக வெளியான செய்தி முற்றிலும் வதந்தி. அதன் பிறகு வேண்டுமானால் ஒருவேளை அவர் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் ஆர்.கே. செல்வமணி.