Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி நடிப்பில் மவுன படமாக உருவாகும் 'காந்தி டாக்ஸ்'

02 அக், 2022 - 06:00 IST
எழுத்தின் அளவு:
Vijay-Sethupathi-and-Arvind-Swamy-lead-Gandhi-Talks-movie-announcement

ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் கிஷோர் பி.பெலேகர் இயக்கத்தில் விஜய்சேதுபதி, அரவிந்த் சாமி இணைந்து நடிக்கும் படம் 'காந்தி டாக்ஸ்'. வசனமில்லாமல் மவுனப் படமாக உருவாகும் இப்படத்தில் அதிதி ராவ் நாயகியாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படம் பிளாக் காமெடி ஜானரில் வசனங்களற்ற மவுனப்படமாக உருவாக உள்ளது. இது மவுனப் படமாக இருப்பதால், அனைத்து 'மொழி' தடைகளையும் உடைத்து, மறந்து போன கடந்த கால மவுனப் பட சகாப்தத்தை - நிகழ்காலத்தில் பார்வையாளர்களுக்கு தரும் ஒரு பேரனுபவமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இப்படத்தின் உலகளாவிய ஒரே மொழி என்பது இசை மட்டுமே என்பதால் பார்வையாளர்களுக்கு புதுவித அனுபவமாக இருக்கும் என இயக்குநர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இயக்குநர் கிஷோர் பி.பெலேகர் கூறுகையில், ''மவுனப் படம் என்பது வித்தை காட்டும் ஒரு செயல் அல்ல இது கதைசொல்லலின் ஒரு வடிவம். பேசும் மொழியான வசனத்தை முற்றிலும் நிராகரித்துவிட்டு உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது கடினமானது மட்டுமல்ல, சுவாரஸ்யமும் சவாலும் கூட'' என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் படத்தின் அறிமுக வீடியோ காந்தி பிறந்த நாளான இன்று வெளியாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கத்திற்கு நடிகர் உதயா கண்டனம்நடிகர் சங்கத்தில் இருந்து ... 'கோச்சடையான்' பாணியில் 'ஆதி புருஷ்' டீசர் 'கோச்சடையான்' பாணியில் 'ஆதி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)