சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சினிமாவில் ஏழை மக்களுக் ஓடி, ஓடி உதவி செய்கிறவர் என்.டி.பாலகிருஷ்ணா. ஏழை மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் பறந்து பறந்து அடித்து வில்லன்களை துவம்சம் செய்கிறவர். ஆனால் சொந்த வாழ்க்கையில் தன்னை எம்.எல்.ஏ ஆக்கிய மக்களை அவர் திரும்பிக்கூட பார்ப்பதில்லையாம். தொகுதி பக்கம் தலைவைத்துகூட படுப்பதில்லையாம். இப்படி அவர் தொகுதி மக்களே போலீசில் புகார் அளித்திருக்கிறார்கள்.
இந்துபுரம் தொகுதியில் ஏற்கனவே சட்டசபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பாலகிருஷ்ணா, சமீபத்தில் நடந்த தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார். தொடர்ந்து இரண்டு முறை இந்துபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
இந்த நிலையில்தான் பாலகிருஷ்ணா மீது போலீசில் தொகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்துள்ள புகார் மனுவில் ''இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருக்கும் பாலகிருஷ்ணா தொகுதியை கண்டுகொள்வது இல்லை. தொகுதியில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இது எதிர்கட்சிகளின் சதி என்று பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் கொந்தளிக்கிறார்கள்.