திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரான ஸ்ரீநாத் பாஷி என்பவர் ஒரு யு-டியூப் சேனலுக்கு பேட்டி கொடுக்க சென்றபோது அங்கிருந்த தொகுப்பாளினியை அநாகரிகமான வார்த்தைகளால் திட்டினார் என்ற செய்தி வெளியாகி கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பை கிளப்பியது. இந்தநிலையில் நடிகர் ஸ்ரீநாத் பாஷி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மோகன்லால் நடிப்பில் வெளியான பிரணயம் என்கிற படத்தின் மூலம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகமான ஸ்ரீநாத் பாஷி, பஹத் பாசில் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கும்பலாங்கி நைட்ஸ், நிவின்பாலியுடன் ஜேக்கப்பிண்டே சொர்க்க ராஜ்ஜியம் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனிக்கத்தக்க நடிகராக மாறினார்
இந்தநிலையில் கடந்த வெள்ளியன்று இவர் கதாநாயகனாக நடித்துள்ள சட்டம்பி என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பிரபல யூடியூப் சேனல் ஒன்றின் பேட்டிக்காக கலந்து கொண்டார் ஸ்ரீநாத் பாஷி. அப்போது தொகுப்பாளர் தன்னை எரிச்சலூட்டும் விதமாக கேள்வி கேட்டதால் கோபமான ஸ்ரீநாத் பாஷி, கேரமாவை ஆப் செய்ய சொல்லிவிட்டு, அவரை அவதூறான வார்த்தைகளால் விமர்சித்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதுகுறித்து பின்னர் மன்னிப்பு தெரிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார் ஸ்ரீநாத் பாஷி. இந்தநிலையில் போலீசார் அவரை விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.. அதைத் தொடர்ந்து நேரில் சென்று, போலீசாரின் விசாரணைக்கு ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்தார் பின்னர் ஸ்ரீநாத் பாஷி. அரைமணி நேர விசாரணைக்கு பிறகு போலீசார் அவரை கைது செய்தனர். அவருக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது போன்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.