நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தெலுங்குத் திரையலகத்தில் சீனியர் ஹீரோவான கிருஷ்ணம் ராஜு நேற்று அதிகாலை உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். 'பாகுபலி' நடிகர் பிரபாஸின் பெரியப்பா தான் கிருஷ்ணம் ராஜு. அவரது மறைவுக்கு தெலுங்குத் திரையுலகத்தினர் மட்டுமல்லாது மற்ற திரையுலகத்தினரும் இரங்கல் தெரிவித்தனர். சிரஞ்சீவி, மகேஷ் பாபு உள்ளிட்ட தெலுங்கு ஹீரோக்கள் நேரில் சென்று மறைந்த கிருஷ்ணம் ராஜுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை மரணம் அடைந்த கிருஷ்ணம் ராஜுவுக்கு சமூக வலைத்தளங்களில் கூட இரங்கல் தெரிவிக்காமல் இருந்தார் 'புஷ்பா' நடிகர் அல்லு அர்ஜுன். சக சீனியர் நடிகர், சக நடிகரின் நெருங்கிய உறவினர் என்று இருந்தும் அல்லு அர்ஜுன் இரங்கல் தெரிவிக்காமல் இருந்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதே சமயம் காலை 9.20 மணியளவில் 'சைமா 2022' விருதுகளை வாங்கியது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து புகைப்படத்துடன் ஒரு பதிவிட்டிருந்தால் அல்லு அர்ஜுன். அதற்கு ரசிகர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்ததுடன் அவரை 'டிரோல்' செய்தனர்.
எதிர்ப்புகளும், சர்ச்சைகளும் எழுந்த பிறகு மதியம் 2 மணி அளவில்தான் கிருஷ்ணம் ராஜுவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டார் அல்லு அர்ஜுன். அவரது இந்த செயல் பிரபாஸ் ரசிகர்களிடமும், கிருஷ்ணம் ராஜு ரசிகர்களிடமும் பொதுவான திரையுலக ரசிகர்களிடமும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.