மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
''அனைத்து குடும்பங்களிலும் இருக்கிற, கோபத்தை மைய கருவாகக் கொண்டு 'சினம்' படம் எடுக்கப்பட்டுள்ளது'' என நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.
ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் திரைப்படம் 'சினம்'. அருண் விஜய்க்கு ஜோடியாக, பாலக் லால்வனி நடித்துள்ளார். இப்படத்தில், அருண் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். வரும் 16ல், திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், கோவையில் உள்ள திரையரங்கில், 'சினம்' திரைப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் திரையிடப்பட்டன. இதில், நடிகர் அருண் விஜய், நடிகை பாலக் லால்வாணி பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் நடிகர் அருண்விஜய் கூறுகையில், ''அனைத்து குடும்பத்திலும் இருக்கிற கோபத்தைதான், அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கின்றோம். அதனையே கதைக் கருவாக கொண்டு, இந்த படமும் எடுக்கப்பட்டுள்ளது. எதார்த்தமான கேரக்டர்தான், இந்த படத்தில் உள்ளது. சாதாரண சப்- இன்ஸ்பெக்டர். அவனுக்கும் ஒரு குடும்பம், காதல் என ஆரம்பித்து, அவனை வேறு இடத்திற்கு கொண்டு செல்கிறது. எந்த இடத்தில் அவன் கோபம் அடைகிறான் என்பதை, அழகாக இயக்குனர் அமைத்துள்ளார்,'' என்றார்.