இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
கன்னட நடிகர் என்கிற அடையாளம் இருந்தாலும் பான் இந்தியா நடிகராக ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகர் கிச்சா சுதீப். சமீபத்தில் வெளியான இவரது விக்ராந்த் ரோனா திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் டீசன்டான வெற்றியை பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய கிச்சா சுதீப்புக்கு அவரே எதிர்பார்த்திராத மிகப்பெரிய கவுரவம் ஒன்று மிகப்பெரிய பரிசாக கர்நாடக அரசாங்கத்தின் மூலம் தேடி வந்துள்ளது.
ஆம்.. கர்நாடகாவில் பசுக்களை தத்தெடுத்து பராமரிக்கும் விதமாக புண்ணியகோட்டி தத்து யோஜனா என்ற கர்நாடக அரசின் திட்டத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார் சுதீப். கர்நாடகாவில் கோசாலைகளில் இருக்கும் பசுக்களை பராமரிக்க, ஒரு பசுவின் ஒரு வருட பராமரிப்பு செலவு தொகையான 11 ஆயிரம் ரூபாயை செலுத்தி பொதுமக்கள் அவற்றை ஆர்வமுடன் தத்தெடுக்க செய்வதற்காக அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சுதீப்புக்கு இந்த கவுரவ பதவி வழங்கப்பட்டுள்ளது.