மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கன்னட நடிகர் என்கிற அடையாளம் இருந்தாலும் பான் இந்தியா நடிகராக ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகர் கிச்சா சுதீப். சமீபத்தில் வெளியான இவரது விக்ராந்த் ரோனா திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் டீசன்டான வெற்றியை பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய கிச்சா சுதீப்புக்கு அவரே எதிர்பார்த்திராத மிகப்பெரிய கவுரவம் ஒன்று மிகப்பெரிய பரிசாக கர்நாடக அரசாங்கத்தின் மூலம் தேடி வந்துள்ளது.
ஆம்.. கர்நாடகாவில் பசுக்களை தத்தெடுத்து பராமரிக்கும் விதமாக புண்ணியகோட்டி தத்து யோஜனா என்ற கர்நாடக அரசின் திட்டத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார் சுதீப். கர்நாடகாவில் கோசாலைகளில் இருக்கும் பசுக்களை பராமரிக்க, ஒரு பசுவின் ஒரு வருட பராமரிப்பு செலவு தொகையான 11 ஆயிரம் ரூபாயை செலுத்தி பொதுமக்கள் அவற்றை ஆர்வமுடன் தத்தெடுக்க செய்வதற்காக அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சுதீப்புக்கு இந்த கவுரவ பதவி வழங்கப்பட்டுள்ளது.