தெலுங்கு படங்களில் நடிப்பதில் உள்ள சங்கடம் இதுதான் : சம்யுக்தா | என்டிஆருக்கு பாரதரத்னா : சிரஞ்சீவி விருப்பம் | 'தி கோட்' - அமெரிக்கா புறப்பட்ட விஜய் | மே 31ல் திரைக்கு வரும் கருடன் திரைப்படம் | அரண்மனையில் கலகலப்பு : சுந்தர்.சியின் அடுத்த பிளான் | கல்கி கன்னட உரிமையை கைப்பற்றிய யஷ் பட நிறுவனம் | தோனி சாயலில் பாகுபலி : ஒப்புக்கொண்ட ராஜமவுலி | ரஜினியை சந்தித்த ஆர்டிஎக்ஸ் இயக்குனர் | கதை நாயகன் ஆன தயாரிப்பாளர் | வானத்தைப்போல ஸ்வேதா திருமணம்: காதலரை மணந்தார் |
நடிகர் விஜய்சேதுபதி தமிழை தொடர்ந்து தெலுங்கில் நுழைந்து சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி, உப்பென்னா ஆகிய படங்களில் நடித்து அங்கேயும் வரவேற்பை பெற்றார். அதை தொடர்ந்து ஹிந்தியிலும் கால்பதித்து படங்களில் நடித்து வருகிறார். அதேபோல மூன்று வருடங்களுக்கு முன்பு மார்க்கோனி மத்தாய் என்கிற படம் மூலம் மலையாளத்திலும் அடியெடுத்து வைத்தார் விஜய்சேதுபதி. ஜெயராம் இன்னொரு கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தை ரெஜிஷ் மிதிலா என்பவர் இயக்கியிருந்தார்.
அந்த படம் பெரிய அளவில் போகவில்லை என்றாலும் விஜய்சேதுபதியை மலையாளத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் என்கிற பெயர் அவருக்கு கிடைத்தது. தற்போது அந்த அறிமுகத்தை பயன்படுத்தி தமிழில் இயக்குனராக அடியெடுத்து வைத்துள்ளார் ரெஜிஷ் மிதிலா. தமிழில் யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கும் யானை முகத்தான் என்கிற படத்தை இயக்குகிறார் ரெஜிஷ் மிதிலா. இந்த படத்தில் ரமேஷ் திலக், கருணாகரன், ஊர்வசி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.