காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா | சிம்பு மீது புகார் : அண்ணன், தம்பி பிரச்னை என்கிறார் ஐசரி கணேஷ் | 'இந்தியன் 2' - புரமோஷன் இன்று ஆரம்பம் | ஜுனியர் என்டிஆருக்காக விட்டுக் கொடுத்த கரண் ஜோஹர் | படம் தாமதமானதால் கண்ணீர் விட்ட கதாநாயகி | சூதாட்ட படத்தில் விஜய்சேதுபதி | விடுதலை 2ம் பாகத்தில் எஸ்.ஜே.சூர்யா? | வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா | பிளாஷ்பேக்: 'மூன்று முடிச்சு' படத்தின் மூலம் ஹீரோவாக்க நினைத்த பாலச்சந்தர்: மறுத்த ஜெயபாரதி |
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் தனுஷ், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிப்பில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த படம் 'திருச்சிற்றம்பலம்'. ஒரு இயல்பான காதல் கதையாக ரசிகர்களின் மனதில் இப்படம் இடம் பிடித்தது. படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக நித்யா மேனனின் கதாபாத்திரமும் நடிப்பும் இருந்தது. அதே சமயம், படத்தில் கதாநாயகனாக நடித்த தனுஷின் நடிப்பையும் விட்டுவிட முடியாது. அவர்கள் இருவருடைய நடிப்பும் திரையில் பிரமாதமாக இருந்தது.
இப்படத்தைப் பார்த்த இயக்குனர் ஷங்கர் கூறுகையில், “திருச்சிற்றம்பலம், அழகான ஒரு படம். வலிகளைத் தொடர்ந்து வரும் அன்பான தருணங்களில்தான் அழகு இருக்கிறது. நித்யா மேனனின் கதாபாத்திரமும், அவரது சிறப்பான நடிப்பும், இதயத்தை கொள்ளையடிக்கிறது. மித்ரன் ஜவஹர் அற்புதமாக எழுதியுள்ளார். டிஎன்எ, வழக்கம் போல, அவர்களது சிறப்பில்…பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோருக்கும் குழுவினருக்கும் வாழ்த்துகள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
'திருச்சிற்றம்பலம்' படம் இன்று மூன்றாவது வாரத்தைத் தொட்டுள்ளது. படத்தின் வசூல் 100 கோடியை நெருங்க வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.