போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தமிழில் ஈரம், மிருகம், யாகவராயினும் நாகாக்க உள்பட பல படங்களில் நாயகனாக நடித்தவர் ஆதி. அதே போல் ஜி.வி .பிரகாஷ் நடித்த டார்லிங் படத்தில் தமிழுக்கு வந்தவர் நிக்கி கல்ராணி. ஆதியும், நிக்கி கல்ராணியும் யாகவராயினும் நாகாக்க மற்றும் மரகத நாணயம் போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள். அப்போது அவர்களுக்கிடையே காதல் உருவாகி கடந்த மே மாதம் 18ம் தேதி சென்னையில் திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்த நிலையில் தங்களுக்கு திருமணமாகி 100 நாள் ஆகிவிட்டதை அடுத்து அதை கொண்டாடுவதற்காக பிரான்சில் உள்ள பாரிஸ் நகருக்கு ஆதியும், நிக்கி கல்ராணியும் சென்றுள்ளார்கள். அது குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிக்கி கல்ராணி, நூறாவது திருமண நாளை காதல் நகரத்தில் சந்தோஷமாக கொண்டாடுகிறோம் என்று பதிவிட்டு இருக்கிறார்.