ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

தமிழில் ஈரம், மிருகம், யாகவராயினும் நாகாக்க உள்பட பல படங்களில் நாயகனாக நடித்தவர் ஆதி. அதே போல் ஜி.வி .பிரகாஷ் நடித்த டார்லிங் படத்தில் தமிழுக்கு வந்தவர் நிக்கி கல்ராணி. ஆதியும், நிக்கி கல்ராணியும் யாகவராயினும் நாகாக்க மற்றும் மரகத நாணயம் போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள். அப்போது அவர்களுக்கிடையே காதல் உருவாகி கடந்த மே மாதம் 18ம் தேதி சென்னையில் திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்த நிலையில் தங்களுக்கு திருமணமாகி 100 நாள் ஆகிவிட்டதை அடுத்து அதை கொண்டாடுவதற்காக பிரான்சில் உள்ள பாரிஸ் நகருக்கு ஆதியும், நிக்கி கல்ராணியும் சென்றுள்ளார்கள். அது குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிக்கி கல்ராணி, நூறாவது திருமண நாளை காதல் நகரத்தில் சந்தோஷமாக கொண்டாடுகிறோம் என்று பதிவிட்டு இருக்கிறார்.