நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
தெலுங்குத் திரையுலகத்தில் 'அர்ஜுன் ரெட்டி' படம் மூலம் மிகவும் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. அவர் நடித்து சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த பான் இந்தியா படமான 'லைகர்' கடும் விமர்சனங்களுக்கு ஆளானது.
அப்படம் வெளியான அன்று தெலுங்குத் திரையுலகின் குணச்சித்திர நடிகை அனுசுயா ஒரு பதிவிட்டிருந்தார். அதில், “ஒரு அம்மாவின் வலி விலகிப் போகாது. கர்மா…சில சமயங்களில் அது வரத் தாமதமாகும், ஆனால், நிச்சயம் வரும்,” என பதிவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து அனசுயாவுக்கும் விஜய் தேவரகொண்டா ரசிகர்களுக்கும் சமூக வலைதளத்தில் மோதல் வெடித்தது. விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் அனசுயாவை மோசமான வார்த்தைகளால் திட்டி கமெண்ட் செய்து வந்தனர்.
அந்த ரசிகர்களுக்கு அனசுயா எச்சரிக்கை விடுத்துள்ளார். ரசிகர்கள் பதிவிடும் ஒவ்வொரு மோசமான கமெண்ட்டையும் அவர் ரீ-டுவிட் வருகிறார். ரசிகர்கள் அனசுயாவை 'ஆன்ட்டி' எனக் குறிப்பிட்டும் கமெண்ட் செய்வது அனசுயாவை மேலும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.
ரசிகர்களின் கமெண்ட்டுகளின் ஸ்கிரின் ஷாட்களை அவர் ரீ-டுவீட் செய்து, தனது குடும்பத்தைப் பற்றியும் அவதூறு பேசி வரும் ரசிகர்கள் மீது வழக்கு தொடுப்பேன், இது தனது கடைசி எச்சரிக்கை என்று தெரிவித்துள்ளார்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு விஜய் தேவரகொண்டா நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான 'அர்ஜுன் ரெட்டி' பட வெளியீட்டின் போது அதில் ஒரு கெட்ட வார்த்தை இடம் பெற்றதற்கு அனசுயா அதை விமர்சித்து கமெண்ட் செய்திருந்தார். அப்போதிருந்தே விஜய் தேவரகொண்டா ரசிகர்களுக்கும், அனசுயாவுக்கும் பிரச்னை ஆரம்பமானது. சில நாட்களுக்கு முன்பு அனசுயா பொதுவாக பதிவிட்டதை 'லைகர்' படத்தின் தோல்வியைத்தான் குறிக்கிறார் என இப்போது மீண்டும் பிரச்னை உருவெடுத்துள்ளது.