மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
மலையாளத்தில் நடிகர் நடிகர் திலீப் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வாய்ஸ் ஆப் சத்தியநாதன். இந்த படத்தை பிரபல கமர்சியல் இயக்குனர் ரபி இயக்கி வருகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் ஜோஜூ ஜார்ஜ், அனுபம் கெர் மற்றும் வில்லனாக ஜெகபதிபாபு ஆகியோர் நடித்து வருகின்றனர். கடந்த வருடமே துவங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு இடையில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது கோல்கட்டாவில் இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த படத்தின் கதை பஹத் பாசிலுக்காகத்தான் முதலில் உருவாக்கப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் இந்த படத்தின் ஒன்லைனை இயக்குனர் ரபியிடம் கொடுத்து டெவலப் பண்ண சொன்னதே பஹத் பாசில் தானாம். ஆனால் முழு ஸ்கிரிப்ட்டையும் தயார் செய்து முடித்ததும், பஹத் பாசில் இந்த கதையை கேட்டுவிட்டு இது நான் நடிக்க வேண்டிய படமே அல்ல.. என்னை விட கமர்ஷியலான நடிகர் ஒருவர் நடித்தால் தான் சரியாக இருக்கும் என்று கூறி ஒதுங்கி விட்டாராம். அந்த சமயத்தில் தான், ரபியிடம் நாம் இணைந்து படம் பண்ணலாம், கதை இருக்கிறதா என்று நடிகர் திலீப் கேட்டுள்ளார். ரபி இந்த கதையை சொன்னதுமே திலீப்புக்கு உடனே பிடித்து போய்விட, அப்படி துவங்கியதுதான் இந்த வாய்ஸ் ஆப் சத்தியநாதன் படம்” என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.