மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
சூர்யா தயாரித்து, நடித்த படம் ஜெய்பீம். த.செ.ஞானவேல் இயக்கி இருந்தார். இது போலீஸ் காவலில் கொல்லப்பட்ட ஒரு இருளர் இளைஞனின் நிஜகதை. இந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று விருதுகளை குவித்தாலும் வழக்குகளும் விடாது துரத்துகிறது. ஒவ்வொரு வழக்கில் இருந்து மீண்டு வந்தாலும் அடுத்தடுத்து வழக்குகள் தொடரப்பட்டு வருகிறது.
தற்போது காப்புரிமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. படத்தில் வரும் கதாபாத்திரங்கள் உண்மையில் வாழ்ந்தவர்கள், அதில் ராஜாக்கண்ணுவின் சகோதரி மகனுமான கொளஞ்சியப்பன் என்பவரும் ஒருவர். அவர் தொடர்பான காட்சிகளும் படத்தில் இடம் பெற்றிருந்தது.
இந்த நிலையில் கொளஞ்சியப்பன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனக்கும், தனது குடும்பத்திற்கும் நடந்த உண்மைச் சம்பவங்களை திரைப்படத்தில் காட்சிப்படுத்தியதற்காக தங்களுக்கும் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்று அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.
வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் தயாரிப்பாளர் சூர்யா மற்றும் இயக்குனர் த.செ.ஞானவேல் ஆகியோர் மீது காப்புரிமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அதன் அறிக்கையை வருகிற செப்டம்பர் 26ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சாஸ்திரி நகர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.