நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கடந்த டிசம்பர் மாதம் தெலுங்கில் உருவாகி பான் இந்தியா படமாக வெளியான 'புஷ்பா ; தி ரைஸ்' படத்திற்கு பிறகு அல்லு அர்ஜுனின் நட்சத்திர அந்தஸ்து மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக தென்னிந்தியா மட்டும் அல்லாது பாலிவுட்டிலும் அல்லு அர்ஜுன் படங்களுக்கு தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் பேசும் வசனங்களும் அவரின் சில மேனரிசங்களும் இந்தியாவைத் தாண்டி வெளிநாட்டில் உள்ளவர்களையும் வசீகரித்தன.
அது எந்த அளவுக்கு எதிரொலித்தது என்றால், சமீபத்தில் நியூயார்க்கில் நடைபெற்ற, சுமார் ஐந்து லட்சம் பார்வையாளர்கள் கலந்து கொண்ட, 'இந்தியா டே பரேட்' நிகழ்ச்சியில் நியூயார்க் மேயர் எரிக் ஆடம் உடன் இணைந்து சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார் அல்லு அர்ஜுன். அதுமட்டுமல்ல அந்த நிகழ்ச்சி முடிந்ததும் அல்லு அர்ஜுன் மீதான தனது ஈர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக, புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் தனது தாடையின் கீழ் கைவைத்து தேய்க்கும் மேனரிசத்தை நியூயார்க் மேயரும் செய்துள்ளார்.

இது குறித்த புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ள அல்லு அர்ஜுன், “நியூயார்க் மேயரை சந்தித்தது ரொம்பவே மகிழ்ச்சி. அவர் பழகுவதற்கு எளிதான ஜென்டில்மேன். என்னை கவுரவப்படுத்தியதற்கு மிக்க நன்றி எரிக் ஆடம்ஸ்” என்று கூறியுள்ளார்.