மலையாள இயக்குனர் சங்கீத் சிவன் காலமானார் | உலகில் புடவையை விட சிறந்த ஆடையில்லை - ஆலியா பட் | கல்கி 2898 ஏ.டி படத்தில் மகேஷ் பாபு? | அமிதாப் பச்சனுக்கு அடுத்து எனக்கு தான் : கங்கனா பெருமிதம் | ‛டிராவல் ஏஜென்ட்' படத்தை துவக்கி வைத்து ஹீரோவை அறிமுகம் செய்த தர்மேந்திரா | எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபலம் | நடிகைகளின் பாராட்டு மழையில் மஞ்சும்மேல் பாய்ஸ் | குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சலசலப்பு : வெளியேறிய நாஞ்சில் விஜயன் | ஜப்பானுக்கு குடும்பத்துடன் டூர் சென்ற புகழ் | ‛தக் லைப்' : சிம்பு நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்து வெற்றி பெற்ற தெலுங்குப் படம் 'புஷ்பா'. தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாகி இங்கு 25 கோடிக்கும் மேல் வசூலித்து லாபத்தைக் கொடுத்த படமாக அமைந்தது.
இரண்டாம் பாகத்தை இன்னும் பிரம்மாண்டமாக சிறப்பாக உருவாக்க வேண்டும் என கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக திரைக்கதையை எழுதி வந்தனர். அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று சொல்லப்பட்ட நிலையில் இன்று(ஆக., 22) இப்படத்தின் பூஜை நடைபெறும் என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.
ஐதராபாத்தில் இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் இயக்குனர் சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் அமெரிக்காவில் இருப்பதாலும், கதாநாயகி ராஷ்மிகா வேறு படத்தின் படப்பிடிப்பில் இருப்பதாலும் கலந்து கொள்ளவில்லை. இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுன், பகத் பாசில் இடையிலான மோதல் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'இரண்டாம் பாகத்திற்கு 'புஷ்பா - த ரூல்' என பெயர் வைத்துள்ளார்கள்.