ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

மலையாள திரையுலகம் மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படம் மூலமாகத்தான் முதன்முறையாக 50 கோடி வசூல் என்கிற சாதனையை சொந்தமாக்கியது. அதன்பிறகு பெரிய நடிகர்களின் படம் வெளியாகும் போதெல்லாம் குறைந்தபட்சம் 50 கோடி வசூல் கிளப்பிலாவது இணைய வேண்டும் என அவர்களது ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்தார்கள்.
அந்தவகையில் மோகன்லாலை தொடர்ந்து பிரித்விராஜ், நிவின்பாலி, மம்முட்டி, துல்கர் சல்மான் என பலரும் அவ்வப்போது 50 கோடி வசூல் கிளப்பில் தங்களது படத்தை இணைத்து சாதனையில் பங்கெடுத்துக் கொண்டனர். அதே சமயம் மலையாள சினிமாவில் மிக முக்கியமான நடிகராக, ஆக்சன் நாயகனாக வலம் வந்த சுரேஷ்கோபி, இதுபோன்ற சாதனைகள் நிகழ்ந்த சமயத்தில் சினிமாவில் இருந்து ஒதுங்கி அரசியல் பக்கம் தனது பார்வையை செலுத்தி வந்தார்.
இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மீண்டும் திரையுலகில் முன்பு போல கவனம் செலுத்தி நடித்து வரும் சுரேஷ்கோபி, இப்போது தானும் முதன்முறையாக 50 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளார். சமீபத்தில் பிரபல இயக்குனர் ஜோஷியின் டைரக்சனில் சுரேஷ் கோபி நடிப்பில் வெளியான பாப்பன் திரைப்படம் 50 கோடி வசூலித்துள்ளதுடன் தற்போதும் பல இடங்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தவகையில் சுரேஷ்கோபி மீண்டும் பார்முக்கு திரும்பி விட்டார் என அவரது ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.