ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

தெலுங்கு திரையுலகின் இளம் முன்னணி ஹீரோவாக வலம்வரும் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில், கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகும் படம் லைகர். பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள இந்த படம் குத்துசசண்டையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்தியில் உருவாகியுள்ள இந்த படம் தென்னிந்திய மொழிகளிலும் சேர்த்து வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. பான் இந்தியா படமாக இது வெளியாக இருப்பதால் கடந்த இரண்டு வாரங்களாக மும்பை, சென்னை, சண்டிகர், ஐதராபாத், கேரளா என இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் மாறிமாறி கலந்து கொண்டு வருகிறார் விஜய் தேவரகொண்டா.
இந்த நிலையில் ஐதராபாத்தில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய்தேவரகொண்டா பத்திரிக்கையாளர்கள் முன்பாக டேபிளில் கால்களை தூக்கி வைத்து நாற்காலியில் குத்தவைத்து அமர்ந்தபடி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நிருபர் ஒருவர் விஜய் தேவரகொண்டாவிடம் பேசும்போது, கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவர் நடித்த டாக்ஸிவாலா படம் ரிலீஸ் ஆன சமயத்தில் விஜய் தேவரகொண்டாவிடம் தன்னால் எப்படி சவுகரியமாக பேச முடியவில்லை என்பது பற்றி கூறினார். அதற்கு நகைச்சுவையாக பதில் அளிப்பதாக நினைத்துக்கொண்ட விஜய் தேவரகொண்டா, “ஏன் இப்படி சவுகரியமாக உட்கார்ந்து கொண்டு இப்போது பேசலாமே” என்று கூறியபடி தனது கால்களை அங்கிருந்த டீப்பாய் மீது தூக்கி வைத்துக்கொண்டு பதில் அளித்துள்ளார். விஜய் தேவரகொண்டாவின் இந்த செயல் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பையும் நெட்டிசன்களிடம் மிகப்பெரிய விமர்சனங்களையும் பெற்று வருகிறது.