நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பாலிவுட் நடிகர் அமீர்கான் தயாரித்து நடித்து கடந்த 11ம் தேதி திரைக்கு வந்த படம் லால் சிங் தத்தா . இந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாதால் பலத்த அதிர்ச்சி அடைந்திருக்கிறார் அமீர்கான். இந்தநிலையில், இப்படத்தை திருட்டுத்தனமாக இணையதளங்களில் சிலர் வெளியிட்டு வந்துள்ளார்கள். இதுகுறித்து வயாகாம் 18 நிறுவனம் பெங்களூரில் உள்ள பனஸ்வாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தது. அதையடுத்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், பெங்களூரில் உள்ள ஓரியண்ட் மாலில் இருந்து லால் சிங் தத்தா படத்தை திருட்டுத்தனமாக இணையத்தில் பதிவேற்றம் செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களிடமிருந்து கம்ப்யூட்டர் மற்றும் கருவிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளார்கள் . அந்த நபர்களிடம் நடத்திய விசாரணைக்கு பிறகு திரைப்படங்களை திருட்டுத்தனமாக இணையத்தில் பதிவேற்ற செய்வதற்காக அவர்கள் ஒரு குழு அமைத்திருப்பதையும் அறிந்து கொண்ட போலீசார், மீதமுள்ள நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.