படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
தெலுங்கில் உப்பெனா என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் கிர்த்தி ஷெட்டி. இந்த படத்தில் விஜய் சேதுபதி அவரது தந்தையாக நடித்திருந்தார். அந்த படம் சூப்பர் ஹிட் அடித்ததால் அதன்பிறகு அவருக்கு நான்கு படங்கள் புக்காகின. அதில் இரண்டு படங்கள் ஹிட் அடித்த நிலையில், அதையடுத்து லிங்குசாமி இயக்கத்தில் ராம்பொத்தனேனிக்கு ஜோடியாக நடித்த தி வாரியர் படம் வரவேற்பை பெறவில்லை.
அந்த படத்தை தொடர்ந்து தற்போது தெலுங்கில் நிதினுக்கு ஜோடியாக கிர்த்தி ஷெட்டி நடித்து கடந்த 12ம் தேதி வெளியாகியுள்ள மச்சேர்ல நியோ ஜெகவர்கம் என்ற படமும் தோல்வி அடைந்து விட்டது. இப்படி இரண்டு படங்கள் அடுத்தடுத்து கிர்த்தி ஷெட்டிக்கு தோல்வியாக அமைந்து விட்ட நிலையில் அடுத்தபடியாக தெலுங்கில் நடித்துள்ள ஆ அம்மை குறிஞ்சி மீக்கு செப்பளி என்ற படத்தை பெரிய அளவில் தான் எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்திருக்கிறார் கிர்த்தி ஷெட்டி. இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. அதோடு, தற்போது பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான், நாகசைதன்யா நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் படத்திலும் தற்போது கிருத்தி ஷெட்டி நடித்து வருகிறார்.