முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி |
நடிகர் மம்முட்டி தான் நடித்து வரும் படம் ஒன்றிற்காக தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் அதன் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்த நிலையில் இலங்கையில் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார் மம்முட்டி. இதுகுறித்த புகைப்படங்களை ஜெயசூர்யாவே தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
90களில் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக, ரன் மெஷினாக வலம் வந்தவர் சனத் ஜெயசூர்யா. கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்த இவர், தற்போது இலங்கையின் சுற்றுலாத்துறை தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் தற்போது நிலவும் மிகவும் நெருக்கடியான சூழலிலும் இலங்கை சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் ஜெயசூர்யா. அதன் ஒரு பகுதியாக தான் ஜெயசூர்யா மம்முட்டி இருவரின் சந்திப்பும் நிகழ்ந்துள்ளது.
இதுபற்றி ஜெயசூர்யா கூறும்போது, “மூத்த மலையாள நடிகர் மம்முட்டியை சந்தித்ததில் பெருமைப்படுகிறேன். உண்மையிலேயே நீங்கள் ஒரு சூப்பர் ஸ்டார்.. ஸ்ரீலங்காவிற்கு வருகை தந்ததற்கு நன்றி. இதேபோல அனைத்து இந்திய நட்சத்திரங்களையும் நண்பர்களையும் எங்களது நாட்டிற்கு சுற்றுலாவாக வந்து பார்வையிட வேண்டுமென அழைப்பு விடுகிறேன்” என்று கூறியுள்ளார்.