நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
கடந்த வருடம் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா திரைப்படம் புஷ்பா தி ரைஸ் என்கிற பெயரில் முதல் பாகமாக வெளியானது. தெலுங்கில் மட்டுமல்லாது மற்ற தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் சேர்த்து இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகா மற்றும் ஒரே ஒரு பாடலுக்கு ஆடிய சமந்தா ஆகியோரின் நடனங்கள் மற்றும் வில்லத்தனம் கலந்த போலீஸ் அதிகாரியாக நடித்த பஹத் பாசிலின் நடிப்பு ஆகியவை படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தன..
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு துவங்க உள்ளது. முதல் பாகத்தில் இடம்பெற்ற பஹத் பாசில் இந்த படத்திலும் தொடர்கிறார். அதே சமயம் இந்த படத்தில் விஜய்சேதுபதி இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தற்போது வரை சொல்லப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விஜய்சேதுபதி குழுவினரின் தரப்பிலிருந்து படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை என்கிற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர் தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் மட்டுமே வில்லனாக நடித்து வருகிறார் என்றும் அவர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்ரம் படத்தை தொடர்ந்து புஷ்பா-2வில் விஜய்சேதுபதி-பஹத் பாசில் கூட்டணியை காண்பதற்கு ஆவலாக இருந்த ரசிகர்கள் இந்த செய்தியால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.