அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா தற்போது தமிழில் விஜய் ஜோடியாக 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். ஹிந்தியிலும் சில படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ராஷ்மிகா இரண்டாம் கதாநாயகியாக நடித்த 'சீதா ராமம்' படம் கடந்த வாரம் வெளிவந்தது. இரண்டாம் கதாநாயகி என்றாலும் படத்தின் திரைக்கதையை நகர்த்தும் முக்கிய கதாபாத்திரம் அது.
ராஷ்மிகா நடித்து இந்த ஆண்டில் வெளிவந்த முதல் வெற்றிப் படம் இது. அவர் நடித்து இதற்கு முன் வெளிவந்த 'ஆடவல்லு மீக்கு ஜோஹார்லு' படம் தோல்விப் படமாக அமைந்தது. எனவே, 'சீதா ராமம்' வெற்றியில் ராஷ்மிகாவும் மகிழ்ச்சியில் உள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் படத்தின் வெற்றி குறித்து பேசுகையில், “சீதா ராமம் வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக படக்குழு மிகவும் கடுமையாக உழைத்தார்கள். அனைவருமே இப்படம் வெற்றி பெறும் என்று நம்பினார்கள்,” என்று தெரிவித்துள்ளார். மேலும், அவர் எந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசையாக உள்ளார் என்ற கேள்விக்கு, “ஒரு சரித்திரப் படத்தில் நடிக்க வேண்டும் என்றும், விளையாட்டை மையமாகக் கொண்ட படத்தில் நடிக்க வேண்டும் என்றும், ஒரு பயோபிக் படத்தில் நடிக்க வேண்டும்,” என்றும் தெரிவித்துள்ளார்.
அம்மாதிரியான கதைகள் வைத்துள்ளவர்கள் ராஷ்மிகாவை அணுகினால் அவரது கால்ஷீட் நிச்சயம் கிடைக்கும். அதே சமயம் அவரது சம்பளம் 4 கோடி என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.