ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

பாலிவுட் முன்னணி நடிகர் அக்ஷய் குமார். அதிக படங்களில் நடிப்பவரும் இவர்தான். அதிக சம்பளம் வாங்குகிறவரும் இவர்தான். கடந்த சில ஆண்டுகளாக வருமான வரி செலுத்தும் இந்திய நடிகர்களில் முதலிடத்தில் இருக்கிறார் . அக்ஷய் குமார் ஒரு படத்திற்கு 130 முதல் 150 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
ஆனால் சமீபகாலமாக அக்ஷய்குமாரின் படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவி வருகின்றன. சமீபத்தில் வெளியான பெல் பாட்டம், பச்சன் பாண்டே, சாம்ராட் பிருத்விராஜ் படங்கள் தோல்வி அடைந்தன. படத்தின் பட்ஜெட்டில் 30 முதல் 40 சதவிகிதமே வசூலித்தது. இதனால் தயாரிப்பு நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.
இதனால் அக்ஷய்குமாரின் சம்பளத்தை குறைப்பது என்று பாலிவுட் தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். இதற்கு அக்ஷய் குமாரும் ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அக்ஷய்குமார் அடுத்து நடிக்க உள்ள படே மியான் சோஹ்டே மியான் படத்தில் நடிக்க 144 கோடி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த சம்பளம் 50 சதவிகிதம் குறைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது 75 கோடி சம்பளம் பெறுகிறார்.