பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் | முழு நீள போலீஸ் வேடத்தில் நடிக்க விஜய் தேவரகொண்டா ஆர்வம் | துல்கர் சல்மானின் ‛காந்தா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | கமல் படத்தில் இணைந்த பிரபல ஒளிப்பதிவாளர் | உஸ்தாத் பகத்சிங் படத்தின் படப்பிடிப்பை முடித்த பவன் கல்யாண் | பிளாஷ்பேக்: 'விமர்சனப் போட்டி' என்று விளம்பரம் செய்து, விடை தெரியாமல் போன “உலகம்” திரைப்படம் | 'ஹவுஸ் மேட்ஸ்' மூலம் தமிழுக்கு வரும் அர்ஷா பைஜு |
பாலிவுட் முன்னணி நடிகர் அக்ஷய் குமார். அதிக படங்களில் நடிப்பவரும் இவர்தான். அதிக சம்பளம் வாங்குகிறவரும் இவர்தான். கடந்த சில ஆண்டுகளாக வருமான வரி செலுத்தும் இந்திய நடிகர்களில் முதலிடத்தில் இருக்கிறார் . அக்ஷய் குமார் ஒரு படத்திற்கு 130 முதல் 150 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
ஆனால் சமீபகாலமாக அக்ஷய்குமாரின் படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவி வருகின்றன. சமீபத்தில் வெளியான பெல் பாட்டம், பச்சன் பாண்டே, சாம்ராட் பிருத்விராஜ் படங்கள் தோல்வி அடைந்தன. படத்தின் பட்ஜெட்டில் 30 முதல் 40 சதவிகிதமே வசூலித்தது. இதனால் தயாரிப்பு நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.
இதனால் அக்ஷய்குமாரின் சம்பளத்தை குறைப்பது என்று பாலிவுட் தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். இதற்கு அக்ஷய் குமாரும் ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அக்ஷய்குமார் அடுத்து நடிக்க உள்ள படே மியான் சோஹ்டே மியான் படத்தில் நடிக்க 144 கோடி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த சம்பளம் 50 சதவிகிதம் குறைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது 75 கோடி சம்பளம் பெறுகிறார்.