வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் | முழு நீள போலீஸ் வேடத்தில் நடிக்க விஜய் தேவரகொண்டா ஆர்வம் | துல்கர் சல்மானின் ‛காந்தா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | கமல் படத்தில் இணைந்த பிரபல ஒளிப்பதிவாளர் | உஸ்தாத் பகத்சிங் படத்தின் படப்பிடிப்பை முடித்த பவன் கல்யாண் | பிளாஷ்பேக்: 'விமர்சனப் போட்டி' என்று விளம்பரம் செய்து, விடை தெரியாமல் போன “உலகம்” திரைப்படம் |
1980களில் முன்னணியில் இருந்த மலையாள இயக்குனர் ஜி.எஸ்.பணிக்கர். இகாகினி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஷோபா, இந்திரபாலன், ரவிமேனன் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் பல விருதுகளைப் பெற்றது. இதை தொடர்ந்து வாசரஸய்யா, சகியன்டே மகன், பிராகிரிதி மனோகரி, பூத்தன்பாண்டி , பாண்டவபுரம் உட்பட பல படங்களை இயக்கினார்.
பின்னர் சொந்தமாக படம் தயாரித்த பணிக்கர் அதன் மூலம் ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக சினிமாவை விட்டு விலகினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மிட் சம்மர் ட்ரீம்ஸ் என்ற படத்தை இயக்குவதாக அறிவித்தார். ஆனால் அந்த படம் தொடங்க இருந்த நேரத்தில் அவருக்கு புற்று நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதன் காரணமாக படத்தை தொடங்காமல் திருவனந்தபுரம் ஆற்றிங்கல் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நோய் தாக்கம் அதிகமாகவே சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று காலமானார். அவரது மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.