மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
கொரோனா தாக்கம் துவங்கிய கடந்த இரண்டு ஆண்டுகளின்போது தமிழகத்தில் கூட ஓரளவு படப்படிப்புகள், தியேட்டர் வெளியீடுகள் என நிலைமை சமாளிக்கத்தக்கதாக இருந்தது. ஆனால் கேரளாவில் லாக்டவுன் நிபந்தனைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டதால் தமிழகம், ஆந்திராவில் பட வெளியீடுகள் துவங்கிய பின்னரும் கூட அதற்கடுத்த சில மாதங்கள் வரை கேரளாவில் தியேட்டர்கள் இயங்கத் துவங்கவில்லை. அதன் பின்னர் கடந்த சில மாதங்களாகத்தான் நிலைமை சீராகி உள்ளது..
அந்த வகையில் கடந்த ஜூலை 7ஆம் தேதி பிரித்விராஜ் நடிப்பில் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் வெளியான கடுவா திரைப்படம் வெற்றிகரமான படமாக அமைந்து விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் மிகப்பெரிய லாபத்தை கொடுத்துள்ளது. கிட்டத்தட்ட படம் வெளியாகி 25 நாட்கள் கடந்துள்ள நிலையில் இந்த படம் 50 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது.
இன்னும் பல தியேட்டர்களில் இந்த படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதேபோல சமீபத்தில் சுரேஷ்கோபி நடிப்பில் வெளியான பாப்பன் திரைப்படமும் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் கூட்டத்தை வரவழைத்துள்ளது. அந்தவகையில் மலையாள திரை உலகம் தற்போது மீண்டும் பார்முக்கு திரும்பி உள்ளது என்று சொல்லலாம்.