நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
தென்னிந்தியத் திரைப்படங்கள் பான்-இந்தியா படங்களாக வெளியாகி ஹிந்தியிலும் வசூல் சாதனையைப் புரிந்தன. 'புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' ஆகிய படங்களி ஹிந்தியில் பெரிய வசூலைப் பெற்றன. அதே சமயம் சில முக்கியமான நேரடி ஹிந்திப் படங்கள் அங்கு தோல்வியைத் தழுவின. அது தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இது குறித்து நடிகர் ஆமீர்கானிடம் சமீபத்தில் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆமீர், “மோசமான படங்கள், ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முடியாத படங்கள் வெற்றி பெற வாய்ப்பில்லை என்பதை வரலாற்றைப் பார்த்தாலே தெரியும். அதுதான் நடந்துள்ளது. 'புஷ்பா, த காஷ்மீர் பைல்ஸ், கங்குபாய் கத்தியவாடி, பூல் புலையா 2' ஆகிய படங்கள் ரசிகர்களால் ரசிக்கப்பட்டன. அதனால், அவை பாக்ஸ் ஆபீசிலும் வசூலை அள்ளின,” என்று தெரிவித்துள்ளார்.
ஆமீர்கான் நடித்துள்ள 'லால் சிங் சத்தா' படம் அடுத்த வாரம் பான் இந்தியா படமாக வெளிவர உள்ளது. இதற்கு முன்பு பல வெற்றிப் படங்களைக் கொடுத்த ஆமீர்கானின் இந்தப் படம் எப்படி வரவேற்பைப் பெறப் போகிறது என்பது குறித்து பாலிவுட்டினர் கூட மிகவும் ஆவலாகக் காத்திருக்கின்றனர்.