நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
கேரளாவில் சர்வதேச திரைப்பட விழா, சர்வதேச பெண்கள் திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலகிலேயே முதன் முறையாக பழங்குடி மொழி திரைப்பட விழா நடக்கிறது.
கேரள மாநிலம் அடப்பாடியில் வருகிற 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் பழங்குடியின மொழியில் தயாரான திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்தியாவில் தயாரான இருள, முதுக, குரும்ப பழங்குடி மொழிகளில் தயாரான படங்கள் திரையிடப்படுகிறது. இதற்கான லோகோ வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது. மம்முட்டி லோகோவை வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர்கள் விஜீஷ் மணி, பி.உன்னிகிருஷ்ணன், தயாரிப்பாளர்கள் டாக்டர் என்.எம்.பாதுஷா, எஸ்.ஜார்ஜ், தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர் அரோமா மோகன், விழா இயக்குநர் விஜீஷ்மணி கலந்து கொண்டனர்.