நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் | தக்லைப் படத்திலிருந்து மீண்டும் விலகினாரா ஜெயம் ரவி? | மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ‛பைசன் காளமாடன்' | மீண்டும் த்ரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் | கடலை சுத்தம் செய்ய கிளம்பிய ரெஜினா | யுனிசெப் தூதராக கரீனா கபூர் நியமனம் | பிளாஷ்பேக்: 'கண்ணீர் திலகம்' ஸ்ரீரஞ்சனி | டைட்டானிக் கேப்டன் காலமானார் |
கேரளாவில் சர்வதேச திரைப்பட விழா, சர்வதேச பெண்கள் திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலகிலேயே முதன் முறையாக பழங்குடி மொழி திரைப்பட விழா நடக்கிறது.
கேரள மாநிலம் அடப்பாடியில் வருகிற 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் பழங்குடியின மொழியில் தயாரான திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்தியாவில் தயாரான இருள, முதுக, குரும்ப பழங்குடி மொழிகளில் தயாரான படங்கள் திரையிடப்படுகிறது. இதற்கான லோகோ வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது. மம்முட்டி லோகோவை வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர்கள் விஜீஷ் மணி, பி.உன்னிகிருஷ்ணன், தயாரிப்பாளர்கள் டாக்டர் என்.எம்.பாதுஷா, எஸ்.ஜார்ஜ், தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர் அரோமா மோகன், விழா இயக்குநர் விஜீஷ்மணி கலந்து கொண்டனர்.