மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
கேரளாவில் சர்வதேச திரைப்பட விழா, சர்வதேச பெண்கள் திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலகிலேயே முதன் முறையாக பழங்குடி மொழி திரைப்பட விழா நடக்கிறது.
கேரள மாநிலம் அடப்பாடியில் வருகிற 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் பழங்குடியின மொழியில் தயாரான திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்தியாவில் தயாரான இருள, முதுக, குரும்ப பழங்குடி மொழிகளில் தயாரான படங்கள் திரையிடப்படுகிறது. இதற்கான லோகோ வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது. மம்முட்டி லோகோவை வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர்கள் விஜீஷ் மணி, பி.உன்னிகிருஷ்ணன், தயாரிப்பாளர்கள் டாக்டர் என்.எம்.பாதுஷா, எஸ்.ஜார்ஜ், தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர் அரோமா மோகன், விழா இயக்குநர் விஜீஷ்மணி கலந்து கொண்டனர்.