நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஆண்ட்ராய்டு குஞ்சப்பன், மாஸ்டர் பீஸ், பிரேக்கிங் நியூஸ், அர்ச்சனா 31 நாட் அவுட், காயங்குளம் கொச்சுன்னி, நந்தனம் உட்பட 50க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்தவர் பாபுராஜ் வாழப்பள்ளி. நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த இவர், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார்.
59 வயதான இவர் தனது குடும்பத்துடன் கோழிகோட்டில் உள்ள குதுருசால் பகுதியில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, ஓமச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். மாரடைப்பால் அவர் மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மறைந்த பாபுராஜ் வாழப்பள்ளிக்கு சந்தியா என்ற மனைவியும் பிஷால் என்ற மகனும் உள்ளனர். பாபுராஜ் வாழப்பள்ளி மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.