தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி | மோடி பயோபிக் படத்தில் நடிப்பது உண்மையா? - சத்யராஜ் தந்த விளக்கம் | இந்தியன் - 2, இந்தியன்- 3 படம் குறித்த புதிய அப்டேட் வெளியிட்ட கமல் - ஷங்கர் | கூத்தாடி ஆகிட்டேன்னு திட்டுவார் : அப்பா குறித்து மதுரை முத்து உருக்கம் | முதியோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய கேப்ரில்லா செல்லஸ் |
தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் 'வாரிசு' படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு இன்று(ஆக.,1) முதல் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணத்தில் ஆரம்பமாகி உள்ளது.
தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் படப்பிடிப்பு நடத்தாமல் ஸ்டிரைக்கில் தயாரிப்பாளர் சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. விபிஎப் கட்டணம், டிக்கெட் கட்டணம், தினசரி ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை, ஓடிடியில் படங்களை வெளியிடுவது, வெளியீட்டுத் தேதிகளில் வரையறை, பட வெளியீட்டில் சில மாற்றம் என சில பல பிரச்சினகைளுக்காக இந்த ஸ்டிரைக் ஆரம்பமாகி உள்ளது.
ஸ்டிரைக் நடந்து கொண்டிருக்கும் போது எப்படி 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கேள்வி எழுந்துள்ளது. தமிழ், தெலுங்கில் தயாராவதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை தமிழில்தான் எடுத்து வருகிறார்களாம். தெலுங்கில் டப்பிங் செய்துதான் வெளியிடப் போகிறார்களாம். ஸ்டிரைக்கில் தெலுங்குப் படங்களின் படப்பிடிப்பு மட்டுமே நடைபெறாது. மற்ற மொழிப் படங்களுக்கு ஒத்துழைப்பு உண்டு என்றும் அறிவித்துள்ளார்களாம். அதனால்தான், விஜய்யின் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. எனவே, மற்ற தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு தடையில்லாமல் நடைபெறும் என்கிறார்கள்.