நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மலையாளத்தில் மகேஷிண்டே பிரதிகாரம் என்கிற படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக அறிமுகமானவர் அபர்ணா பாலமுரளி. தமிழில் வெளியான சூரரைப்போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமான அபர்ணா பாலமுரளி, அந்த படத்தில் நடித்ததற்காக சமீபத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டதன் மூலம் முன்னணி நடிகையாகவும் உயர்ந்துள்ளார்... இந்த நிலையில் அவர் மலையாளத்தில் மீண்டும் பிஸியான நடிகையாக மாறியுள்ளார்.
அந்த வகையில் மலையாள இளம் நடிகர் ஆசிப் அலியுடன் தொடர்ந்து நான்காவது முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கிறார் அபர்ணா பாலமுரளி. ஏற்கனவே ஆசிப் அலி நடித்த காக்சி அம்மணிப்பிள்ள என்கிற படத்தை இயக்கிய டிஞ்சித் என்பவர் தான் இந்த படத்தையும் இயக்குகிறார். பொதுவாக மலையாள திரையுலகில் கதாசிரியர்களுடன் இணைந்து இயக்குனர்கள் பயணித்து வரும் நிலையில் காக்சி அம்மணிப்பிள்ள படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பகுல் ரமேஷ் என்பவர் தான் இந்தப்படத்திற்கு கதை எழுதியுள்ளார் என்பது ஆச்சர்யமான ஒன்று.