நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
மலையாள சினிமாவிலும், சின்னத்திரையிலும் நடித்து வருகிறவர் அஸ்வதி பாபு. கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். தமிழ் நாட்டில் மீரா மிதுன், ஆந்திராவில் ஸ்ரீரெட்டி போன்று மலையாளத்தில் பரபரப்புக்கு பெயர் பெற்றவர் இவர்.
4 ஆண்டுகளுக்கு முன் தனது வீட்டில் பாலியல் தொழில் நடத்தியதாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிறை தண்டனை பெற்று பின்பு விடுதலை ஆனார். மது போதைக்கு அடிமையான அஸ்வதி பாபு பலமுறை போதை பொருளுடன் போலீசிடம் சிக்கி உள்ளார். இது தொடர்பான வழக்குகளும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை அஸ்வதி தனது புதிய காதலன் நவுவலுடன் கொச்சி நகருக்குள் காரில் பயணித்துக் கொண்டிருந்தார். கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்றது. இதை கண்ட பொதுமக்கள் காரை துரத்தி பிடிக்க முயன்றனர். அப்போது கார் டயர் வெடித்து நின்றது. அதில் இருந்து இறங்கிய அஸ்வதியும், காதலன் நவுபலும் இறங்கி ஓடி தலைமறைவானார்கள். விரைந்து வந்த போலீசார் மறைந்திருந்த இருவரையும் தேடிக் கண்டுபிடித்து கைது செய்தனர். மருத்துவ பரிசோதனையில் இருவரும் போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் இருவரையும் கைது செய்த போலீசார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார்கள்.