அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
நடிகர் சிம்பு 40 வயதை நெருங்கிவிட்டார். ஆனால் இன்னும் திருமணம் செய்யவில்லை. அவருக்கு ஏற்ற மணப்பெண்ணை அவரது குடும்பத்தார் தேடி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பிய டி.ராஜேந்தருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, தனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து தமிழ் மக்களுக்கும் நன்றி கூறியவர், மேல் சிகிச்சைக்கு அமெரிக்கா செல்ல உதவிய முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோருக்கும் டி.ராஜேந்தர் நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து அவரிடத்தில் சிம்பு திருமணம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், ‛‛திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. இந்த உலகத்தில் கடவுள் எழுதினால் தான் திருமணம் நடக்கும். நிச்சயமாக சிம்புவின் நல்ல மனதிற்கு ஒரு நல்ல மணப்பெண்ணை, நல்ல குலமகளாக, திருமகளாக என் வீட்டிற்கு ஒரு நல்ல மருமகளை இறைவன் அனுப்ப வேண்டும் என நான் வேண்டுகிறேன். மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து கடவுள்களிடம் இதுகுறித்து பிரார்த்தனை செய்கிறேன்'' என்றார் டி.ராஜேந்தர்.