குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே. நாராயணா கடந்த சில நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில் சிரஞ்சீவியை 'அரசியல் புரோக்கர்' என்று விமர்சித்திருந்தார். இது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சிரஞ்சீவி ரசிகர் மன்றத்தினரும், தெலுங்கு திரையுலகமும் நாராயணாவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தது. பல இடங்களில் சிரஞ்சீவி ரசிகர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
இந்த நிலையில் தனது கருத்தை வாபஸ் பெற்றதோடு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் நாராயணா. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: அரசியல் தலைவர்கள் போட்டியாளர்களை விமர்சிப்பது சகஜம். எனது சமீபத்திய கருத்துக்களால் சிரஞ்சீவியின் ரசிகர்கள் மற்றும் கபு சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் புண்பட்டுள்ளனர் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. விமர்சனம் என்பது ஜனநாயகத்தின் ஒரு அங்கம். ஆனாலும் , நான் மொழியின் வரம்புகளைத் தாண்டியிருக்கக் கூடாது. இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்று அவர் தெரிவித்திருக்கிறார்.