திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'விக்ரம்' படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் பெரிய வசூலையும், லாபத்தையும் ஒரு படம் கூட கொடுக்கவில்லை என்பது உண்மை. 'டி பிளாக், ராக்கெட்ரி, யானை' ஆகியவை மட்டும் மிகச் சுமாரான வசூலைக் கொடுத்ததாகச் சொல்கிறார்கள். ஆனாலும், அந்தப் படங்கள் ஒரு வாரம் கூட முழுதாகத் தாக்குப் பிடிக்க முடியவில்லை என்பது சோகத்திலும் சோகம்.
வாரா வாராம் நான்கைந்து படங்கள் வந்தாலும், அடுத்து என்ன பெரிய படம் வரும் என தியேட்டர்காரர்கள் காத்திருக்கிறார்கள். இந்த வாரம் ஜுலை 22ம் தேதியும் நான்கைந்து படங்கள் வெளிவர உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். ஆனால், அந்தப் படங்கள் எதுவுமே குறைந்தபட்ச எதிர்பார்ப்பை கூட ஏற்படுத்தவில்லை. அவற்றின் வியாபாரங்களும் மிகவும் மந்தமாக இருப்பதாக கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“தேஜாவு, மஹா, நதி, வார்டு 126, சிவி 2” ஆகிய படங்கள் இந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் எந்தப் படம் இரண்டு, மூன்று நாட்களாவது தாக்குப் பிடித்து ஓடும் என்பது வார இறுதியில்தான் தெரியும்.