திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகையான நயன்தாரா அவரது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார். சென்னை அருகே மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் மிக விமரிசையாக அந்தத் திருமணம் நடைபெற்றது.
நடிகர் ரஜினிகாந்த், ஷாரூக்கான் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் அதில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். திருமண நிகழ்வுகளை புகைப்படம் எடுக்கவோ, வீடியோ எடுக்கவோ யாரும் அனுமதிக்கப்படவில்லை. உள்ளே அனுமதிக்காமல் வெளியில் நிற்க வைத்தாலும் கூட, சில செய்தி சேனல்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சாலையில் நின்று கொண்டு வீடியோ எடுத்து வெளியிட்டனர்.
ஓடிடி தளத்திற்கு தங்களது திருமணம் பற்றிய நிகழ்வை நிகழ்ச்சியாக்கி பெரிய தொகைக்கு நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் விற்றுவிட்டதாக செய்திகள் வெளிவந்தது. அதற்கேற்றபடி திருமணம் நடந்து முடிந்ததும் ஒரு சில புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டனர். வந்து வாழ்த்திய பிரபலங்களின் புகைப்படங்கள் சிலவற்றை ஒரு மாதத்திற்குப் பிறகு மட்டுமே வெளியிட்டார்கள்.
அவர்களது திருமணம் ஓடிடியில் வரும் என்று சொல்லப்பட்டது போல இதுவரை வரவில்லை. இதனிடையே, அந்த உரிமையை வாங்கிய நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் அதற்காக தாங்கள் அளித்த 25 கோடியைத் திருப்பித் தருமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
தங்கள் அனுமதி இல்லாமல் பிரபலங்கள் வாழ்த்திய புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்ட காரணத்தால், அவர் ஒப்பந்தத்தை மீறியதாக நெட்பிளிக்ஸ் குற்றம் சாட்டியுள்ளதாம். மேலும், நயன்தாரா, விக்னேஷ் சிவனின் திருமண செலவு மொத்தத்தையும் நெட்பிளிக்ஸ் பார்த்துக் கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. திருமண ஏற்பாடுகள், மணமேடை, மணம் நடந்த இடத்தின் அலங்காரம், பிரபலங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஹோட்டல்கள் செலவு, செக்யூரிட்டி, ஒருவருக்கான திருமண உணவு செலவு 3500 ரூபாய் என அனைத்திற்கும் நெட்பிளிக்ஸ் செலவு செய்ததாம். இதுவரை இப்படி ஒரு ஸ்பான்சர்ஷிப் திருமணத்தை தமிழ் சினிமா உலகம் கேள்விப்பட்டதில்லை.
இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. நயன்தாரா, விக்னேஷ் சிவன், நெட்பிளிக்ஸ் இது குறித்து வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டால் மட்டுமே உண்மை என்ன என்பது தெரிய வரும்.