நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கேரளாவில் ஆண்டுதோறும் சர்வதேச பெண்கள் திரைப்பட விழா நடக்கிறது. இதனை கேரள அரசின் கலாசித்ர அகாடமி நடத்துகிறது. பெண்களை மையப்படுத்தி வெளிவந்த படங்கள், பெண்கள் இயக்கிய படங்கள் இதில் திரையிடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கேரள சர்வதேசப் பெண்கள் திரைப்பட விழா கோழிக்கோட்டில் தொடங்கியது.
இந்தப் பட விழாவில் திரையிட, குஞ்சில்லா மாசிலாமணி என்பவர், தான் இயக்கிய 'அசங்காதிதார்' என்ற படத்தை அனுப்பி இருந்தார். இது ஓடிடி தளத்தில் வெளியான 'பிரீடம் பைட்' என்ற அந்தாலஜியில் இடம்பெற்ற ஒரு குறும்படம். பொதுவாக இந்த விழாவில் ஓடிடியில் வெளியான படங்கள் திரையிடப்படுவதில்லை. இதனை காரணம் காட்டி அசங்காததிதார் படத்தை நிராகரித்து விட்டனர்.
இந்த விதியை மாற்ற வேண்டும். எல்லா தளத்திலும் வெளியாகும் படங்களை வெளியிட வேண்டும் என்று கேரள பெண் இயக்குனர்கள் வற்புறுத்தி வந்தார்கள். இந்நிலையில் சர்வதே திரைப்பட தொடக்க விழாவில் இயக்குநர் குஞ்சில்லா மாசிலாமணி மேடை ஏறிச் சென்று அரசுக்கு எதிராகவும் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராகவும் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தார். இதை தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து அவரை அப்புறப்படுத்தினர். ஆனால் கைது செய்யவில்லை.
இது திரைப்பட விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோன்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை திரைப்படவிழாவில் இயக்குனர் லீனா மணிமேகலை திடீர் ஆர்ப்பாட்டம் செய்தது குறிப்பிடத்தக்கது.